Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4151

முருகனை வணங்கிட : தன்னை அறிந்து தகைமை பெற தமிழே துணை என்பதை அறியலாம். என்றும் இளமையாக மரணமற்று முருகப்பெருமான் இருப்பது போலவே முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழும் என்றும் இளமையாகவே இருப்பதையும், என்றும் அழியாமலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். தமிழ் ஞானமொழியாகும். உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் தமிழைக் கற்றால் அன்றி வேறு மார்க்கமில்லை. தமிழ் மொழி மட்டுமே உடம்பையும், உயிரையும் பற்றி விளக்கி மரணமிலாப் பெருவாழ்வை அடைய உதவும் மொழியாகும். … Read more

குரு உபதேசம் – 4150

முருகனை வணங்கிட : உடம்பிற்கு அதிக சக்தி தந்தால் காமத்தை உண்டு பண்ணுமென்றும், சக்தி தராவிட்டால் உடம்பு நலிந்து விடும் என்றும், மிகுதியான உணவு மிகுதி காமமாக மாறுவதினாலே காமம் அதிகமாகி ஞானம் கெட்டுவிடும். உணவு இல்லையேல் உடம்பு நலிந்து ஞானம் கெட்டுவிடும். உடம்பு என்பது உணவின் அடிப்படை, ஞானமும் யோகமும் உடம்பின் அடிப்படையில் வருவது. ஆதலின் உடம்பை காக்க உணவினை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும். ஞானம் அடைய உடம்பை கட்டுப்பாடாக வைத்து கொள்ள வேண்டும். … Read more

குரு உபதேசம் – 4149

முருகனை வணங்கிட : செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும்.

குரு உபதேசம் – 4148

முருகனை வணங்கிட : பிறஉயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும் உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம். கோடியுகம் தவம்செய்த குகனைப் போற்றி பாடிப் பணிவதே பண்பு. ஆற்றலாம் முருகனின் அடியைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். அருளாளன் முருகனின் அடியை போற்றிட இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் – 4147

முருகனை வணங்கிட : பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவற்றை வென்று, என்றும் இளமையாக அழிவிலாத ஒளி உடம்பை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான அறிவும், சாகாக்கல்வியும் ஆகும். பற்றற்ற முனிவன் பாதம் பணிந்திட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும். கற்றறிந்து சொன்ன கருத்து இதுவாகுமே உற்றது சொன்னோம் ஓதி உணர்வீர்.

குரு உபதேசம் – 4146

முருகனை பூஜித்திட : முருகப்பெருமான் திருவடிகளை வணங்குதலான திருவடி பூஜையும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால் வளர்பிறை போன்று அறிவு தெளிவாகி வரும். பூஜையும் அன்னதானமும் செய்யாவிட்டால் நாளுக்கு நாள் அறிவு தேய்பிறை போல தேய்ந்து இருண்டே போய்விடும். புண்ணியமும் அருளும் பெருகிட முருகப்பெருமான் திருவடிகளை பூசித்திடுவோம்.

குரு உபதேசம் – 4145

முருகனை பூஜித்திட : பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.

குரு உபதேசம் – 4144

முருகனை பூஜித்திட :  உணவிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவையும், சிந்தையில் தூய்மை உண்டாகி சிந்தையில் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், செயல் தூய்மை உண்டாகி செயலிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், சொல்லிலே தூய்மை உண்டாகி, சொல்லிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், பார்வையிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும் பெற்று தீவிர சைவநெறி நின்று முருகனது ஆசிகளை முழுமையாக பெறலாம். உணவிலே சைவம்   :      தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல். சிந்தையில் சைவம்  :      எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட … Read more

குரு உபதேசம் – 4143

முருகப்பெருமானை பூஜித்திட்டால் : காலத்தையும் அறிந்து வெல்லலாம், காலனையும் அறிந்து வெல்லலாம். காலத்தையும் காலனையும் வென்று பொடிப்பொடியாக்கிய கந்தபெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவார்கள். கருணைக்கடல் கந்தபிரான் திருவடியை மனமுருகி பூஜித்தால்தான் காலத்தை வென்று காலனையும் வெல்கின்ற சாகாக்கல்வியை கற்க முடியும். அதை விடுத்து எத்துணை கல்வி கற்றாலும் பயனில்லை, எத்துணை அறிவு இருந்தாலும் பயனில்லை, எத்துணை ஆற்றல் இருந்தாலும் பயனில்லை, வெல்லற்கரிய மாமாயை வெல்லும் சாகாக்கல்வியை கற்காவிட்டால் எந்த பயனும் இல்லை … Read more