Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4223

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம். பாலன் முருகன் பாதம் பணிந்திட காலனும் அஞ்சுவான் கண்டவர் கருத்தே. எந்தை கந்தன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் அறிவு. பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி … Read more

குரு உபதேசம் 4222

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இக பர வாழ்விற்கு என்றும் துணையாய் இருப்பது முருகன் திருவடியே என்று அறியலாம். கடந்த ஒன்றை கண்டவன் கந்தன் கடந்த ஒன்றை காட்டுவான் உண்மையே.

குரு உபதேசம் 4221

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வெப்பமாகிய சூரிய கலையையும், குளிர்ச்சியாகிய சந்திரகலையையும், அக்னியாகிய சுழிமுனையில் செலுத்தி ஒரு மென்மையான வேதியியல் செய்தால் மாசுள்ள தேகம் மாசு நீங்கி ஒளிதேகம் பெறலாம் என்று அறியலாம். ஒளிதேகம் பெற்ற உத்தமன் முருகன் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான கல்வியும், சாகாக்கல்வியும் ஆகும். சாகாக்கல்வி அறிந்தவனும் முருகனே! சாகாக்கல்வி தந்தவனும் முருகனே!

குரு உபதேசம் 4220

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவராசிகள் மகிழ வாழ்வதற்குரிய அறிவும் பரிபக்குவமும் முருகப்பெருமான் அருளால்தான் பெற முடியும் என்று அறியலாம். வேலவன் அடியை போற்றுவோம் வெற்றி பெறுவோம் காலனை வென்ற கந்தனை போற்றுவோம். நவகோடி சித்தர்கள் நாயகன் முருகனே பவவினை அகலவே பரிந்தருள்வான்.

குரு உபதேசம் 4219

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட : பக்தி, யோகம், ஞானம், தானம் இந்த நான்கும் சித்திபெறுவதற்கு முருகப்பெருமான் ஆசியால்தான் முடியும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4218

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானின் திருவடி நிழலில் வாழ்கின்ற மக்கள் பிற உயிர்கள் மகிழும்படியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம். கந்தனை போற்றியே வந்தனை செய்திட சிந்தை தெளிவாகும் மனமே சிந்தை தெளிவாகும். வள்ளலார் திருவடியை வாழ்த்தி வணங்குவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

குரு உபதேசம் 4217

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம். பணிந்தேன் குகனின் பாதம் பணிந்தேன் துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன். வேதத் தலைவன் வேலனைப் போற்றிட நாதவிந்து நல்கும் முக்தியே.

குரு உபதேசம் 4216

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம். இருவிழிக்கு நடுவில் இயங்கும் குகனே கருவழி கடக்க காட்டுவான் உண்மை. உண்மையாம் … Read more