குரு உபதேசம் 4215
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : உயிர்களுக்கு நன்மை செய்கின்ற அறிவையும் வாய்ப்பையும் பெறுவதோடு உயிர்கள் மகிழ்வினிலே ஆசியையும் பெற்றிட வழிவகைகளையும் பெற்று உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம். கருணையே வடிவான கந்தனை போற்றிட தருணத்தே வந்து தானருள்வானே. கருணையே வடிவான கந்தனை போற்றிட அருணனைப் போல அருள்வான் உண்மையே. குணவான் முருகனை கூவி அழைத்திட மனமாயை இல்லை மனமும் செம்மையே. அருளாளன் முருகன் அருளைப் போற்றவே இருளெல்லாம் விலகி இன்பம் உண்டாம்.


