Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4517

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் எடுத்த காமதேகத்தின் இயல்பினால் ஞானம் புலப்படாது. ஞானத்தின் மீதும் நம்பிக்கை உண்டாகாது. முருகப்பெருமானை வணங்க வணங்க காமதேகத்தின் இயல்புகள் குறைந்து, முதலில் தர்ம சிந்தையும், பக்தியும் உண்டாகி, தர்மமும் பக்தியும் பெருக பெருக, யோக ஞான அறிவு உண்டாகி அதன் பின் யோகப்பயிற்சி செய்து, பின் ஞானத்திற்குரிய அறிவும் பரிபக்குவமும் உண்டாகி இறுதியில் முருகனே அந்த தலைசிறந்த பக்தனுடன் வாசியோடு வாசியாக கலந்து காமதேகத்தை முற்றிலும் மாற்றி … Read more

குரு உபதேசம் 4516

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை மனம் உருகி பூஜிக்க பூஜிக்க ஞான நூல் போன்றவை கற்று கடவுள் நம்பிக்கை உண்டாகி முதலில் தர்மம் செய்தால்தான் எல்லாம் சாத்தியம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொள்வார்கள். தர்மம் செய்து செய்து தர்மத்தின் மீது நம்பிக்கையும் தர்மம் செய்ய செய்ய இறைவனது உண்மை நிலையை உணர்த்துவார். அகத்தீசன் தயவே வடிவானவன், இறைவன் என்பதும் அவனே, எல்லா ஜீவர்களிடத்தும் நிறைந்துள்ளதையும் உணர்த்துவார். அகத்தீசன் ஜீவர்களுக்கு செய்யும் உபகாரமே இறைவனுக்கு செய்யும் … Read more

குரு உபதேசம் 4515

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் … Read more

குரு உபதேசம் 4514

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க பக்தி செலுத்தும் முறை தெரிந்து கொண்டு ஞான நூல்களை படித்து ஞான நூல்கள் அருளிய ஞானிகள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற பெற, ஞான நூல் ரகசியங்கள் புலப்படும். ஞான நூல்களில் கூறப்பட்ட ரகசியம் புரிய வேண்டுமெனில் அகத்தீசன் தயவு வேண்டுமென்பதும், அகத்தீசனே ஞானத்திற்கான வழிமுறை கூறும் தலைவன் என்பதும் அகத்தீசனே முருகப்பெருமானிடத்து நம்மைக் கொண்டு செல்பவர் என்பதும் முருகனே யோக ஞானம் போதிக்கும் ஆதிஞான … Read more

குரு உபதேசம் 4513

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும் நமது கர்ம வினைகளை நீக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதும், முருகனது அருள் ஒன்றினால்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட சக்திகள் கட்டுப்படுகின்றன என்பதும், அகத்தியர் முதல் அரங்கன் வரையிலும் முருகனது தயவால்தான் முருகனது அருளால்தான் ஞானிகளாய் ஆகி ஞானவர்க்கமே உண்டானது என்பதும் புலப்படும். … Read more

குரு உபதேசம் 4512

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க ஞானநூல்களை படிக்க வேண்டுமென ஆர்வம் உண்டாகும். மகான் திருவள்ளுவர், திருக்குறள், மகான் திருமூலர், திருமந்திரம், மகான் மாணிக்கவாசகரின் திருவாசகம், மகான் ராமலிங்க சுவாமிகளின், அருட்பா போன்றவற்றை படிக்கப் படிக்க நூல்கள் கற்பதைவிட நூல்களை இயற்றிய ஞானிகள் திருவடிகளை பற்றினால்தான் நூல்களின் சாரம் புரியும் என்பதும், ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க நம்முள் பக்தி தோன்றுவதையும் உணரலாம். பக்தியே முக்திக்கு மூலவித்தாய் இருப்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4511

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக … Read more

குரு உபதேசம் 4510

அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அடைவது அவசியம் என்பதும், இந்த நான்கு படிநிலைகளையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்காய், மகான் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மகான் திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்ற ஞானநூல்களை பயபக்தியுடன் வணங்கி படித்தால் அறிந்து கொள்ளலாம் என்பதையும், ஆனால் அதைவிட எளிமையான வழி எதுவெனில் எந்த ஞானி இந்த நூலை எழுதினார்களோ அவர்களது சூட்சுமங்களை … Read more