Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4305

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் திருவடிப்பெருமைகளைப் பேசி மக்களை நல்வழிப்படுத்துகின்ற அறிவைப் பெறலாம். ……………… நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமென்றே உணர்வார் உண்மையே! பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட இருவினையும் இல்லை இடரும் இல்லையே.

குரு உபதேசம் 4304

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உண்மை ஞானம் அடைகின்ற வழிமுறைகளை அறிவதோடு ஆன்மீகத்தின் பெயரால் தகுதியற்ற நபர்கள் ஞானிகளைப் போல் நடித்து சிவராஜ யோகத்தையோ, பிரணாயாம பயிற்சிகளையோ இராஜயோகம் என்றோ இன்னும் பலபல விதங்களிலே கடவுள் பெயரால் ஏமாற்றி பொருள் பறித்து வாழுகின்றவர்களெல்லாம் ஞானத்திற்கும் யோகத்திற்கும் தலைவனான முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கொடுமையான நோயால் அவதிப்படுவர். பக்கவாதம், முதுகுபிளவை, புற்றுநோய் போன்ற தீராத நோய்களினால் சூழப்பட்டு யாரும் கிட்டே நெருங்க முடியாத வகையிலே துர்மணம் வீசிட … Read more

குரு உபதேசம் 4303

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், மேலும் உயிர்களிடத்து அன்பு செய்யச் செய்தும், உயிர்களிடத்து ஆசி பெறுகின்ற அறிவையும் பெற்று, அந்த அறிவின் உதவியாலும் முருகப்பெருமான் கருணையாலும் உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம். உலக உயிர்களிடத்து ஆசி பெறுவதே தவம் என்பதையும் உணர்ந்து உயிர்களிடத்து ஆசி பெறுவதையே தவமாய் தவறாமல் செய்து ஜீவதயவை பெருக்கி, பெறுதற்கரிய பெரும் பேற்றையும் அடையலாம். இவை அனைத்தும் முருகப்பெருமான் … Read more

குரு உபதேசம் 4302

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : முக்காலத்தையும் அறிவது மட்டுமல்லாமல் உலகினில் தோன்றிய எல்லா மொழிகளையும் பேசுகின்ற வல்லமைகளை பெறலாம். ……………… காலத்தை வென்ற கந்தனடியை போற்றிட ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே. பக்குவம் மிக்கதோர் பன்மொழி புலவனை தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.

குரு உபதேசம் 4301

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : இடது கலையையும், வலது கலையையும், சுழிமுனையையும் அறிந்து உணர்ந்து தெளிவடையும் அற்புத கலை ஞானமாம் மெய்ஞானம் தனை பெறலாம். மெய்ஞானம் கைவரப் பெற்று இடது கலையாகிய சந்திர கலையையும் வலது கலையையும் பதியாகிய சுழிமுனையாகிய புருவமத்தியில் முருகப்பெருமானின் திருவருளாலே முருகப்பெருமானே நமது தேகத்தை சார்ந்து வழி நடத்திட உள்ளிருந்து அருள்பாலித்து நிற்க, ஒன்று சேர்த்திட, சேராத இடது வலது கலைகள் ஒன்றிணைந்து பத்தாம் வாசலாகிய புருவமத்தியினை திறந்து … Read more

குரு உபதேசம் 4300

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சித்தர்கோன் அகத்திய மகரிஷியின் ஆசியை பெறுவதோடு அவர் வழிவந்த ஞானவர்க்கத்தில் தோன்றிய நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் பெறுவதோடு ஞானியாகுவதற்கான வாய்ப்பையும் பெறலாம். ஞானியாவதற்கு மூலகாரணமாக விளங்கி நிற்பவன் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், அவனே அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கிற்கும் தலைவன் என்பதையும், அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆகிய நான்கையும் அறிந்து கொள்ளவும், அதை அறிந்து கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும், … Read more

குரு உபதேசம் 4299

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், புலால் உண்ணும் பழக்கத்திலிருந்து நம்மை மீட்பான் முருகப்பெருமான். மேலும் தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது பாவம் என்பதையும் உணரச் செய்து அந்த கொடிய செயலிலிருந்து நம்மை காப்பதோடு இதுவரை நாம் செய்த பாவங்களிலிருந்தும் மீட்டு காப்பான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் 4298

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய ஆகிய நான்கையும் முருகனது ஆசியால்தான் அறிய முடியும் என்றும், இவை நான்கிற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம். ………………  குருத்தை அறிந்து குணம் பல காண முருகனின்  ருத்தை அறிந்தால் காணலாம் உண்மை.  கடந்தான் முருகனின் கழலிணை போற்றிட திடமாம் அறிவு சித்தியும் உண்டாம். காலனை வென்ற கந்தனைப் போற்றிட ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே. புண்ணிய முருகனின் பொற்பதம் போற்றிட … Read more

குரு உபதேசம் 4297

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : எல்லாம் வல்ல இயற்கை உயிர்களை தோற்றுவிக்கும் போதே அதனுள் ஒருவித மயக்கத்தை வைத்தே படைத்துள்ளது. அது தேகத்தினுள் தங்கிய கசடாக உள்ளது. அந்த மயக்கமே நித்தியத்தை அநித்தியம் என்றும், அநித்தியத்தை நித்தியமென்றும் நம்பி மயங்குகிறது. அசுத்த தேகத்திலுள்ள தேகக்கசடை நீக்கி விட்டால் சுத்த தேகமாகும். சுத்த தேகம் அசுத்தமாகிய மயக்கம் நீங்க பெற்றதால் நித்தியத்தை நித்தியமாக உணர்ந்து அநித்தியத்தையும் நித்தியமாக ஆக்கிக் கொள்ளும். இவ்விதம் இயற்கையின் மயக்கம் நம்முள் … Read more